சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் உள்பட 3 பேர் இன்று பலியாகி உள்ளனர்.
அவர்களில் ஒருவர் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் ஆவார். மற்றொருவர் கோயம்பேடு சந்தையை சேர்ந்த 56 வயது காய்கறி வியாபாரி ஆவார்.
இவர்கள் தவிர சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கடந்த 5ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளார். அவருக்கு முன்பே உடல்நல குறைவு ஏற்பட்டிருந்தது.
காய்கறி வியாபாரி உள்பட 2 பேருக்கும் உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.
Comment:*
Nickname*
E-mail*
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.